விலங்கு வேட்டையாடிய மனிதர்கள், சமூக மாக உருப்பெற்றார்கள். இப்போது சக மனிதர் களை வேட்டையாடும் விலங்குநிலைச் சமூகமாகஉலகம் மாறிவருகிறது என்பதைத் திகைப்பூட்டும் விதத்தில் சித்தரிக்கும் படம்தான் 2021ல் நெட்பிளிக்ஸ் தயாரிப்பாக வெளிவந்த “ஐ கேர் எ லாட்”(I CARE A LOT). உலகில் நல்லவர், கெட்டவர் என்ற பிரிவே இல்லை. மேலும், இன்றைய உலகில் நேர்மையுடன் கடினமாக உழைத்தால் சந்தோசமும், வெற்றியும் தேடி வரும் என்பதெல்லாம் நம்பிக்கை ஊட்டுவதற்கான அறிவுரை களே. இரண்டே விஷயங்கள் உண்டு.வேட்டையாடுவது: இல்லையேல் இரையாவது: நீங்கள் சிங்கமா? ஆட்டுக் குட்டியா?என்ற கேள்விகளுடன் படம் துவங்குகிறது. மார்லா க்ரேஷனும்,ஃப்ரானும் நெருங்கிய தோழியர்.இருவரும் கிரேசன்கார்டியன்ஷிப் என்ற முதியோர் காப்பகத்தை நடத்தி வருகின்றனர்.இது வாரிசில்லாத மற்றும் குடும்பத்தாரால் தனித்து விடப்பட்ட செல்வந்தர் களுக்கானது.தோழியர் இருவரும் கோடீஸ்வரிகளாகும் தங்கள் லட்சியத்துக்காக எதையும் செய்யத் துணிந்த வர்கள். பார்க்க்ஷையர் ஓக்ஸ் ஃபெஸிலிட்டி என்பது, சமூகத்து டன் இணைந்து வாழத் தகுதியற்ற மனநோயாளி என நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட முதியோர் இங்கே அடைக்கப்படுவர். இது சிறைச்சாலை போன்றது.இதன் மேலாளர் சாம் ரைஸ்.இவனும் பணத்தாசை பிடித்தவன்.
நகரில் பெயர்பெற்ற மருத்துவமனை நடத்தி வருபவள் டாக்டர் கரன்;இவளும் பணத்தையே குறிக்கோளாக கொண்டவள். க்ரேஷன் தலைமையில்,மேற்கண்ட மூவரின் கள்ளக் கூட்டணியே சதிச்செயல்களை அரங்கேற்றுகிறது. டாக்டர் கரன் தரும் பணக்கார நோயாளிகள் பற்றிய தகவல்களை க்ரேஷன் பெற்றதும்,அவர்களது சொத்து,உறவினர் விபரங்களை விசாரித்தறிவாள். பின் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்படும்.மருத்துவர் கரன் நீதிமன்றத்தில் நோயாளி தனியாக வாழத் தகுதியற்றவர். சமூகத்துக்கு ஆபத்தானவர் என்று சாட்சியம் அளிப்பாள். இறுதியில் அப்பாவி நோயாளி க்ரேஷனுடைய காப்பகத்தில் சேர்க்கப் படுவார். இதில் முரண்டுபிடிப்பவர்கள், சாம் ரைஸின் சிறைச்சாலை காப்பகத்தில் அடைக்கப்படுவர்.இந்த அப்பாவிகளுக்கு தேவையற்ற மருந்துகள் செலுத்தப்பட்டு நடைபிணமாக்கப்படுவர். பின்னர் பராமரிப்புக்காக என்று அவர்களது சொத்தை ஏலம் விட்டு அபகரிப்பதே இந்த மூவர் கள்ளக்கும்பலின் நோக்கம். ஃபெல்ஸ்டார்ம் என்பவனின் தாய் மறதி நோயால் பாதிக்கப்பட்டவள்.மூவர் கும்பலின் சதியால் இவள் காப்பகத்தில் வைக்கப்படுகிறாள்.நீதிமன்றத் தடை யாணையால் ஃபெல்ஸ்ட்ராம் தன் தாயைச் சந்திக்க முடியவில்லை. இதனால் அவன் க்ரேஷன் மீது கடும்கோபத்தில் உள்ளான்.
இதேபோன்று மறதி நோயாளி, கோடீஸ்வரி ஜெனிபர் பீட்டரசன் என்பவளும், நீதிமன்ற ஆணைப்படி காப்பத்துக்குக் கொண்டுவரப்பட்டு மருந்து கள் கொடுக்கப்பட்டு அரைமயக்கநிலையில் வைக்கப் படுகிறாள். அவளது ஆவணங்கள் வங்கிலாக்கர் சாவிகள் கைப்பற்றப்பட்டு பங்குச்சான்றுகள், வைரங்கள் கொள்ளை யடிக்கப்படுகின்றன. மாஃபியா கும்பல் தலைவன் ரோமன் லுன்யூ.பிறப்பால் குள்ளனாகிய இவனின் தாய் தான் ஜெனீபர்.பல மில்லியன் டாலர்கள் மதிப்பிலான வெளிநாட்டு நிதி நிறுவனங்களுக்குச் சொந்தக்காரன்.இவனது தாயை, க்ரேஷன் கும்பல் தந்திரமாகக் கடத்தியது அறிந்து, வெகுண்டெழுகிறான். தாயை மீட்க சகல முயற்சிகளும் செய்து தோல்வி அடைகிறான். பின்பு, க்ரேஷன் மற்றும் தோழி ஃப்ரானை கொல்ல முயற்சிக் கிறான். இருவரும் அதிலிருந்து தப்பிக்கிறார்கள். இதற்கிடையே, டாக்டர் கரனையும் குண்டர் படையை வைத்து கொலை செய்கிறான். தப்பித்த தோழியர்கள் ஜெனீபரைப்பற்றி மீண்டும் விசாரிக்கையில், உண்மையான ஜெனீபர் நான்கு வயதிலேயே போலியோ பிளேக் நோயால் இறந்து விட்டார் என்ற திடுக்கிடும் தகவல் கிடைக்கிறது.தற்போதைய ஜெனீபரே போலியானவள் என உறுதி செய்கிறார்கள்.
சுதாரித்தத் தோழிகள், ரோமனை தந்திரமாகக் கடத்தி, மூவர் கும்பல் துணையுடன் நீதிமன்ற ஆணை பெற்று, க்ரேஷனின் முதியோர் இல்லத்திலேயே சேர்க்கிறார்கள். தப்பிக்க வழியில்லாத கையறு நிலையில் உள்ள ரோமன், க்ரேஷனுடன் ஒப்பந்தத்திற்கு வருகிறான்.ரோமனின் அளப்பரிய சொத்துக்களையும், க்ரேஷனின் அசாத்திய திறமையையும் முதலீடாக்கி, புதிய முதியோர் பராமரிப்பு நிறுவனத்தை தொடங்குகிறார்கள். இந்தப் புதிய முதியோர் காப்பகம் உலகளவில் வளர்ந்து பெரிய கார்ப்பரேட் நிறுவனமாகிறது.க்ரேஷன், இதற்கு முதன்மை செயல் அலுவலர் ஆகிறாள். இதற்கிடையே, முதியோர் இல்லத்தில் உள்ள ஃபெல்ஸ்ட்ராமின் தாய் இறக்கிறாள். இதனால் ஃபெல்ஸ்ட்ராம் கொலைவெறியுடன் க்ரேஷனைத் தேடி அலைகிறான். வெற்றி பெற்ற க்ரேஷனை, தொலைக்காட்சி பேட்டி எடுக்கிறது.பேட்டி முடிந்து சந்தோசத்தில் வெளியேறும் க்ரேஷனை வெளியே காத்திருந்த ஃபெல்ஸ்ட்ராம் சுட்டுக் கொல்வதுடன் படம் முடிகிறது. பெற்றோரின் பெருமையை பாதுகாக்கத் தவறிய அவர்களின் நோயின் வலியை உணராத, அக்கறையற்ற பிள்ளைகள் எங்கெல்லாம் இருக்கின்றார்களோ, அங்கெல் லாம் அப்பெற்றோர்களை பாதுகாத்து பராமரிப்பது தனது கடமை என்றும், அவ்வாறு பராமரிக்கும் போது, அந்த பெற்றோர்களின் சொத்தையும் பராமரிக்க வேண்டியது தனதுகடமை என நாயகி நீதி மன்றத்தில் வழக்காடு கையில் குறிப் பிடுவாள். பெற்றோரைப் பாது காக்கத் தவறிய பிள்ளைகளுக்கு பெற்றோரின் சொத்தின் மீது உரிமை கோர அருகதை இல்லை என்பதோடு, க்ரேஷன் போன்ற பிணந் தின்னிகளின் குற்றத் துக்கு, அவர்களும் காரணகர்த்தர்களே என்பதையும் படம் உணர வைக்கிறது.
உயரமான அழகிய தோற்றத்தில் க்ரேஷன்.அரு வருப்பான தோற்றத்தில் குள்ளன் ரோமன்.தோற்றத்தில் வேறுபட்டாலும் குணாம்சத்தில் இருவருமே வேட்டையாடிகள். ரோமனும் க்ரேஷனும் ஆன்மாவின் சிதைந்த வடிவங்களின் குறியீடுகள். ஒரு காட்சியில் ப்ரான், ”வைரத்தை திருடிவிட்டாயா?” என க்ரேஷனிடம் கேட்பாள். அதற்கு அவள் வைரத்தை இருந்த இடத்திலிருந்து பாதுகாப்பான இடத்தில் மாற்றி வைத்துள்ளேன் என திருட்டுக்கு புது அர்த்தத்தை கொடுப்பாள். மேற்கண்ட காட்சிகள், சகமனிதனை வேட்டையாடு கின்ற சமூகத்தில் ஒழுக்கக்கட்டுபாடுகள் குறித்த புரிதல்கள், எவ்வாறு மறுவரையறை செய்யப்படுகிறது என்பதைக் காட்டுகிறது. பணத்துக்காக பாதகச் செயல்புரியும் கார்ப்பரேட் மனோபாவத்தையும் படம் சித்தரிக்கிறது. குள்ள மனிதனாக நடித்துள்ள பீட்டர் டின்கிளே தனது முகபாவங்களை கோபத்தில் சிங்கம் போல் கர்ஜித்து மிரட்டிள்ளார். பின்னணி இசை கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டு செல்கிறது. க்ரேஷனாக நடித்துள்ள கதாநாயகியின் உயர்ந்த தோற்றம் ஏற்றுக்கொண்ட பாத்திரத்திற்கு பொருந்தி வருகிறது. மிகச் சிறப்பாகவும் நடித்துள்ளார். இப்படத்தை ஜே.ஃப்ளாக்சென் சிறப்பாக இயக்கி யுள்ளார்.
“வேட்டைச் சமூகம் இங்கே,
இறைச்சி விலைக்கு
இதயங்கள் கிடைக்கும்.”
என்ற கவிஞர் நவஜீவனின் கவிதைவரிகள் இப்படத்தை பார்த்து முடிக்கையில் நினைவில் வந்து அழுத்தியது.